Posts

Showing posts from December, 2013
கத்தி கத்திக்கு மட்டும் வாய் இருந்தால் கத்தி கத்தி சொல்லியிருக்கும் சுத்தி சுத்தி வந்திருக்கும் புத்தியில் உறைக்கும்படி என்னை ரத்தத்தில் தேய்க்காதே என்று
தாய் உரமிழந்த உணர்வுகளுக்கு உரமிட்டவளே தட்டில் இட்டலி சட்டினி வைத்து தன்னை பட்டினி இட்டு கொண்டவளே உண்ண மறுத்துவிட்டால் உப்பில்லையோ  என சப்பு கொட்டி அடுத்த வேலை உணவை அழகுடன் பரிமாறியவளே கைமாறு உண்டோ நீ செய்த தியாகத்திற்கு ஆராரோ  பாட நான் தாய் அல்ல உன் சேய் நான் அழுகிறேன் உண் அருமை எண்ணி
பூவைக்கு பூவை சூட பூப்போல் பூவாய் வந்தேன் பூவையே பூப்போல் பூவாய் நின்றாய் பூவை சூடாமல் பூபோலவே திரும்பினேன்