Posts

Showing posts from 2017
கடலுக்கு சென்றானே! கரை திரும்பவில்லையே? கரை ஒதுங்கியிருப்பனோ! கரை மிதந்திருப்பனோ! தெரியவில்லையே! அய்யோ ................... அலைபேசி மணி அழைக்கிறதே ! அழைப்பு  மணியோ ! இல்லை   இனி  அழைக்கமுடியா மணியோ! தெரியவில்லையே !!!!!!!!!!!!?????????? .......................ப. சதீஷ் ......................
நல்ல காற்று நாறிப்போன  வாசம் ஊறிப்போன நேசம் தேறவில்லையே உடம்பு -------- ப. சதீஷ் ----------
கரு மேகமே  கொஞ்சம் பொறு மேகமே கோபம் கொண்டு மின்னுவதெல்லாம் யார் மேல் உள்ள கோபமோ கொஞ்சம் பொறு பொறு அழுகை கண்ணீர் வேண்டாம் உந்தன் ஆனந்த கண்ணீரால் பூமி தாய் குளிர்ந்து விட்டால் எங்கள் தாகம் தனித்துகொள்வோம் ----------------------------  ப. சதீஷ் -------------------------------------------------------------------------
அடுத்தவர் வீட்டில் இறந்தவர்கள் ஆவியாகிவிட்ட நிலையில் நம் வீட்டில் இறந்தவர்கள் மட்டும் சாமியாகிவிடுகிறார்கள்
எழுதி பழகிய என் பேனா பென்சில் கிறுக்கலில் உயிரூட்டப்பட்டது ஒரு ஓவியம் என் மகனின் முயற்சியில் என் பேனா எழுத மறுத்தது ஓவியம் வரையபட்டபிறகு
அலைந்த  காற்றில் வளைநத தென்னையே உந்தன் கீற்று  கிழிந்ததோ கவலை வேண்டாம் குவளை போல் பூப்பாய் பெய்யும் மழை திவலையில்
திருடனிடம் தாலியை பறிகொடுத்த அம்மனிடம் தாலி வரம் வேண்டி பெண்கள்
வரலாற்று வாசனை                                                                                                                        ப. சதீஷ்                                                ...
புத்தாண்டு கதிரவனுக்கு இல்லை வழக்கம் போல் உதித்தான் பூக்களுக்கு இல்லை மலர்ந்தன மகிழ்ச்சியில்   பறவைகளுக்கு இல்லை பறந்தன பாசமாய் மானிடனுக்கு மட்டும் வழக்கத்துக்கு மாறாய் இன்னிசையுடன்  இரவில் விடியலை தேடி