Posts

Showing posts from 2018

சிவ்வண்டே

சில் வண்டே சில்வண்டே.கொஞ்சம் நில் வண்டே நில் வண்டே. என்னிடம் சொல் வண்டே சொல் வண்டே. எங்கே கற்றாய் இன்னிசையை துட்டு இல்லாமல் மெட்டு போடுகிறாய். ஏழிசைக்குள் யாழிசைக்கிறாய்,
உன் முகம் பாராமல் வெளியே சென்ற என் அகம் குளிரவில்லை பெயர்ந்தது என் கால் நகம் உன்னக்கு தெரியுமா பெயர்ந்தது நகம் மட்டுமல்ல என் முகமும்தான்
  ஊது வத்தி ஏற்றி சூடம் காட்டி பயபக்தியுடன் கையெடுத்து கும்பிட்டான கடை முதலாளி விற்பனை நல்ல முறையில் நிகழ ஆம்  அவன் மது கடையை ஏலம்  எடுத்தவன்
கரு கரு மேகமே கொஞ்சம் பொறு பொறு  மேகமே விறு விறு என்று செல்லும் மாயம் என்ன சொல்லு நின்று கொஞ்சம்  குளித்தால் எங்கள் பூமி கொஞ்சம் குளிரும் ப. சதீஷ்
அப்பா நாட்டிற்காக உழைத்தாய் நற்குணங்களை  பெற்றாய் அதிகாலை எழவைத்து பாட புத்தகங்களை புரட்ட வைத்தாய் தேய்த்து குளிப்பாட்டி வைத்தாய் பள்ளிக்கு அழைத்து சென்று கல்லூரி படிகட்டை  மிதிக்கவைத்து குறைந்த வருவாயில் துணி மணி தைத்து கொடுத்து , கேட்டதை எல்லாம்  வாங்கிகொடுத்து வேலைக்கு  அழைத்து சென்று பணியில் சேரவைத்தாய் திருமணம்(ரணம்) செய்துவைத்து குடும்ப பொறுப்பை  உணரவைத்தாய்  பிரிவு என்றால் என்ன என உணரவைத்து தெய்வமாகிவிட்டாய் தந்தையே விழுதுகள் மண்ணை தொடும் வரை வாழ்ந்த நீ துளிர் விட்டபோது வீழ்ந்து விட்டாயே கொலைகார  பாவி என்ற பட்டத்தை கொடுத்துவிட்டு ??????????????????????????????? ============ ப. சதீஷ் ======================
நில்லு நில்லு காற்றே கொஞ்சம் நில்லு அதிகாலைகாற்றே கொஞ்சம் நில்லு என்னவள் முகம் பார்த்து வந்து சொல்லு வாடிய முகமோ  இல்லை எனை தேடிய முகமோ சொல்லு சொல்லு  நீ கேட்டு வந்து சொல்லு காற்று போல் வருவான் என இல்லை ஊற்று போல் வருவான் என நினைத்தாளோ -------------ப. சதீஷ் -------------------------
------------- புல்லாங்குழல்--------------- நாதமுள்ள நாதனுக்கு நான் எழுதும் நாதம் ஆறு துளைகளுக்குள் அடக்கினாய் ஒன்பது துளை கொண்டவனை நாதி அற்று நாண்டுவிடுவான் உன் நாதம் கேட்காதவன்  ---------------- ப. சதீஷ் --------------------
இலவச அரிசி எடைகளில் இலவசமாக இழககபடுகிறது நியாயவிலை கடைகளில் அநியாயமாக பத்து கிலோவுக்கு எண்ணூறு கிராம்  என்று
வெளுத்துப்போன சாயம் விவசாயம் விவசாயி மனசெல்லாம் காயம் அரசாங்கம் உருட்டிபாக்குது தாயம் போட்ட திட்டமெல்லாம் மாயம்
ஒரு விவசாயியின்  ஓல குரல்  பொங்கலோ பொங்கல் பொங்கியது பொங்கல் கொண்டடி தூங்கியது  நீங்கள் திண்டாடி ஏங்கியது நாங்கள் பொங்கலோ பொங்கல் ----------------- ப. சதீஷ் ---------------------